ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் 29 ஆம் திகதி முன்வைப்பு!

தொலைநோக்குப் பார்வையுடன் புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டத்தை உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இம்மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை நாட்டுக்கு முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பான இலங்கையை உருவாக்கும் வேலைத்திட்டம் அதில் உள்ளடங்குவதாகவும் அவர் கூறினார்.

மாவனல்லை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (27) பிற்பகல் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles