ஜப்பானில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீதிகள் பிளந்து கடும் சேதம் அடைந்தன.
மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது மீளப்பெறப்பட்டது.
மொத்தம் 155 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலன நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 3-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் பயங்கர நிலநடுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரையோர பகுதிகளில் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கம் குறித்து தொலைபேசியில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் மக்கள் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றதால் உயிரிழப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை எனக் கூறப்படுகின்றது.
மீட்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன. பல பகுதிகளில் மின்சாரம் இல்லை.