ஜி 20 தலைமை : சவால்களுக்கு மத்தியிலும் சாதிக்கும் இந்தியா!

உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் 2023ஆம் ஆண்டுக்கான ஜி 20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இது உலக அளவில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

உலகில் பல்வேறு காரணங்களினால் பொருளாதார மந்த நிலையை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வுகளைப் பெறும் நோக்கில் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு ஜி 20 அமைப்பு 1999ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் அங்கத்துவ நாடுகளுக்கு இதன் தலைமைப் பொறுப்பு வழங்கப்படுகிறது. சர்வதேச நாடுகள் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொண்ட நிலையில், இந்தியா 2023ஆம் ஆண்டுக்கான ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதனால் சர்வதேச அளவில் இந்தியா மையப்புள்ளியை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

அத்துடன், ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் கீழ் இயங்கும், உலகளாவிய பிராந்திய அமைப்பான ஷங்காய் கூட்டுறவு அமைப்புக்கான தலைமைப் பொறுப்பும் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்தத் தலைமைப் பொறுப்பு இந்தியா வசமிருக்கும்.

சர்வதேச ரீதியில் 85 சதவீத உள்நாட்டு உற்பத்தியையும், 75 சதவீதம் சர்வதேச வர்த்தகத்தையும், உலக மக்கள் தொகையில் 60 சதவீதத்தையும் (சுமார் 460 கோடி மக்கள்) இந்த அமைப்பு கொண்டுள்ளது. 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இதில் அங்கம் வகிக்கின்றன.

முன்னதாக macro economics குறித்து மட்டும் விவாதிக்கப்பட்டு, முடிவுகள் எட்டப்பட்டன. ஆனால், அதன்பின்னர் ஏற்பட்ட மந்த நிலை மற்றும் அவசியம் கருதி, வர்த்தகம், காலநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி, சுகாதாரம், விவசாயம், எரிசக்தி, சுற்றுச்சூழல், ஊழல் எதிர்ப்பு உள்ளிட்ட பல துறைகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நெருக்கடிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, கொள்கைத் தீர்மானங்களை எடுக்கும் வகையில் விரிவாக்கப்பட்டது.

ஜி 20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவிற்குள்ள பொறுப்புக்களால்,  சர்வதேச அளவில் இந்தியா முக்கிய இடத்தை அடைந்துள்ளது.

தலைமை ஏற்ற இந்தியாவின் முக்கியத்துவம்

கொவிட் பெருதொற்று, ரஸ்ய – உக்ரெய்ன் போரினால் 2023ஆம் ஆண்டில் உலக அளவில் ஏற்படப் போகும் உணவு நெருக்கடி, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்பு என பெரும் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா இந்த தலைமையை ஏற்றுள்ளது.

உலகம் முழுவதும் 20 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். 10 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான தருணத்தில் இந்தியா உலக அரங்கில் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளது.

உலகில் பலநாடுகளில் 2023ஆம் ஆண்டு பொருளாதார மந்தநிலை ஏற்படக் கூடும் என்றும் அப்படி ஏற்பட்டால் என்ன செய்வது என்றும் நாடுகள் சிந்திக்க ஆரம்பித்துள்ளன. பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்வதற்கும், சமாளிப்பதற்கும் திட்டங்களை வகுத்து வருகின்றன.

உலகளாவிய ரீதியில் சுமார் 70 நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதில் இலங்கையும், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு அருகில் இருக்கும் நாடுகளாகும்.

கொவிட் பெருந்தொற்று, ரஸ்ய – உக்ரெய்ன் போர் ஆகியவற்றினால் பல நாடுகள் பொருளாதார ரீதியாக பின்னடைவைச் சந்தித்துள்ள போதிலும், இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையில் இந்தியாவிற்கு இதன் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதும், அடுத்த என்ன நகர்வுகளை இந்தியா எடுக்கும் என்பதையும் பார்க்கலாம்.

அடுத்து என்ன?

இந்தியாவின் தலைமையில் ஜி 20 கூட்டமைப்பு சந்திக்கும் சவால்களையும், அவற்றைத் தீர்க்க எடுக்கும் முன்னெடுப்புக்களையும் பார்க்கலாம்.

1. ரஷ்ய – உக்ரைன் போர் உலக அளவில் நேரடி, மறைமுக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. அணிசேராக் கொள்கையில் உள்ள இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஒருமித்த கருத்தை இது சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளிடமும் ஏற்படுத்தி, ஒருமித்த கருத்தை உருவாக்கும் நாடாக இந்தியா செயல்படும்.

2. உலகின் பெரும்பாலான நாடுகள் கடன் பிரச்சினையால் திணறி வருகின்றன. உலக வங்கியின் 2022ஆம் ஆண்டறிக்கையின் படி, 70இற்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட நாடுகளும், சுமார் 10இற்கும் மேற்பட்ட நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளும் மிகவும் கடுமையான கடன் பிரச்னையில் சிக்கியுள்ளன. இதற்குத் தீர்வு காண்பதற்காக, கடன் வழங்கும் உலக நிதி நிறுவனங்களின் விதிமுறைகளை சீரமைக்க இக்கூட்டமைப்பு மூலம் இந்தியா முயற்சிகளை எடுக்கும்.

3. உலக அளவில் மக்களுக்கு நலன்சார் திட்டங்களில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகளையும் அதற்கான அமைப்புகளையும் இந்தியா ஏற்படுத்தும்.

5. 2019ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, உலகில் விளையும் 89 மில்லியன் டொன் சிறுதானியத்தில் இந்தியாவின் பங்கு சுமார் 25 சதவிகிதம் ஆகும். கோதுமை விளைச்சலுக்குத் தேவைப்படுவது போல, இதற்கு அதிகமான தண்ணீர் தேவையில்லை. 2023ஆம் ஆண்டு சர்வதேசத் சிறுதானிய ஆண்டாக (International Year of Millets) அறிவிக்க கடந்த ஆண்டு ஐ.நா-வில் தீர்மானத்தை இந்தியா முன்னெடுத்தது. இதற்கு 72 நாடுகள் ஆதரவு அளிக்க, ஐ.நா-வும் 2023-யை சர்வதேசத் சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. பல நாடுகளில் சிறுதானிய விளைச்சலை ஊக்குவிப்பதற்கான முயற்சியை இக்கூட்டமைப்பு எடுக்கும்.

6. டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னெடுப்பதில் இந்தியாவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கும். உலகிலிருக்கும் 195 நாடுகளில், 130 நாடுகளில் டிஜிட்டல் வழி பணம் செலுத்தும் அமைப்பு இதுவரை ஸ்தாபிக்கப்படவில்லை. இந்தியாவின் ஜன்-தன் திட்டம் மூலம் சுமார் 400 மில்லியன் பேர் வங்கியில் கணக்கு ஆரம்பித்தனர். அது போல, கடந்த ஆண்டு யு.பி.ஐ (UPI) மூலம் சுமார் 46.8 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதை உலக அளவில் எடுத்துச் செல்ல, குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளுக்கு, இக்கூட்டமைப்பின் தலைமை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவை அனைத்தும் அடுத்த ஆண்டில் மிக முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டு, கொள்கைத் தீர்மானங்களை எடுக்க வேண்டிய விடயங்களாகும். இவற்றை செய்வதற்கான பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் உலக அரங்கில் இந்தியா தன்னை நிலைநிறுத்தி, மிகப் பெரிய சக்தியாக உருமாற்றி வருகிறது.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles