“ ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவக்கூடும்.” – என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்விரு கட்டிகளும் வாக்காளர்கள் அளிக்கும் 78 சதவீத வாக்குகளால் இந்த போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“ ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி 15 சத வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளும்.
அதேநேரத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவை 05 சதவீத வாக்குகளையே பெறும்.
அதேபோன்று புதிதாக களமிறங்கும் கட்சி மற்றும் எம்மிடமிருந்து பிறிந்து சென்றவர்களின் கட்சி ஆகியவை 02 சதவீத வாக்குகளை பெற்றுக்கொள்வார்கள்.” – எனவும் எஸ்.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
ஆ.ரமேஷ்