ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்ள்ஸ் மிசெலுக்கும் (Charles Michel) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றது.
இந்த சந்திப்பு ஜேர்மனின் பேர்லின் நகரில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
