ஜோர்தானில் இலங்கையர்கள்மீது கண்ணீர்புகை தாக்குதல்! அழைத்துவர நடவடிக்கை எடுக்குமா அரசு?

ஜோர்தானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் மீது அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா காரணமாக தொழிலை இழந்த நிலையில், இலங்கை பணியாளர்கள் சிலர் ஜோர்தானில் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில், தம்மை இலங்கைகு திருப்பி அனுப்புமாறு அவர்கள் கோரி வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக இலங்கை தூதரக அதிகாரிகள் சிலர் பணியாளர்களுடன் கலந்துரையாட சென்றுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றை வழங்கவில்லை என தெரிவித்து பணியாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கிட்டத்தட்ட 340 இலங்கை தொழிலாளர்கள் அதிகாரிகளை சுற்றி வளைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, ஏற்பட்ட அமைதியின்னையைக் கட்டுப்படுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் மீது அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் கண்ணீர்புகை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக செய்தித் தொடர்பாளர் மங்கள ராண்டேனியா, தொற்றுநோயால் வேலை இழந்து ஐந்து மாதங்களுக்கும் மேலாக தாங்கள் விடுதிகளில் சிக்கியிருப்பதால் தொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தூதரக அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறும்போது ஒரு தவறான புரிதலின் விளைவாக பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் இலங்கைத் தொழிலாளர்களின் தவறான நடத்தை காரணமாக எழுந்த நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles