“ டைட்டானிக் கப்பலையே என்னிடம் கையளித்தனர். அந்த கப்பலை நான் தற்போது துறைமுகத்துக்கு கொண்டுவந்துள்ளேன்.
பனிப்பாறைகளுக்கு பயந்து மாலுமிகள் எல்லாம் தப்பியோடினர். எவரும் இருக்கவில்லை. வாழ்வா, சாவா என்ற இக்கட்டான நிலைமையே காணப்பட்டது.
கடலில் மூழ்கி மரணிப்பதா? கரைசேர்வதா என்ற நிலை காணப்பட்டபோதும் கப்பலை துறைமுகத்துக்கு கொண்டுவந்துள்ளேன்.
எனவே, அந்த கப்பலை புனரமைத்து இன்னும் 50, 100 வருடங்களுக்கு பயணிப்பதா அல்லது தப்பியோடிய மாலுமிகளிடம் ஒப்படைப்பதா என மக்கள் தீர்மானிக்க வேண்டும்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்தார்.
மாத்தறையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி, டைட்டானிக் கப்பலுடன் இலங்கையின் அரசியல் நிலைவரத்தை ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்.
வங்குரோத்து அடைந்த நாட்டை தான் மீட்டுள்ளார் என்பதையே ‘கப்பலை துறைமுகத்துக்கு கொண்டுவந்துள்ளேன்’ என்ற விடயம்மூலம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல ‘மாலுமிகள் தப்பியோடினர்’ என்ற சொற்பதம் மூலம், சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஆட்சியை பொறுப்பேற்காமல் நழுவினர் என்பதை குறிப்பிட்டுள்ளார்.