தடம் புரண்டது ருஹுணு குமாரி!

ருஹுணு குமாரி கடுகதி ரயில் தடம் புரண்டதால் கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதமே இன்று (ஆகஸ்ட் 15) புஸ்ஸ பகுதியில் தடம் புரண்டது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து ஹிக்கடுவை வரையான புகையிரதங்களை மட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த வழித்தடத்தில் ஓடும் ரயிலை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles