தனிமைப்படுத்தல் நிலையத்துக்குசென்ற பஸ் விபத்து – 17 பேர் காயம்!

ஓமான் நாட்டிலிருந்து இலங்கை திரும்பிய 25 பயணிகளை யாழ். விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு, ஏற்றிவந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.

கிளிநொச்சி பளை – ஆனைவிழுந்தான் பகுதியிலேயே இன்று காலை 9.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்துள்ள 3 பேர் உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். ஏனையோர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்விய 254 பேர் தனிமைப்படுத்தலுக்காக விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 11 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related Articles

Latest Articles