தரம் ஒன்றிக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் சில மாற்றம்

2024ஆண்டில் முதலாம் ஆண்டுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் மே மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட தேவையுடைய மாணவர்களுடன் வகுப்பறையில் கல்வி கற்கக்கூடிய பிள்ளைகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது மட்டத்தில் சிறப்புத் தேவையுடைய மாணவர்களை சிறப்புக் கல்விப் பிரிவுகளுக்கு வழிநடத்தப்படவுள்ளது.

கடுமையான குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு 4 வயது முதல் கல்வி கற்பிக்கவும், 5 வயதுக்குள் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பவும் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த குழந்தைகளின் பதிவு குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளின் உதவியுடன் செய்யப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles