தற்கொலை தாக்குதல் சவாலை ஏற்றோம்: மக்களை காத்தோம்!

“ தற்கொலை தாக்குதல்போன்றதொரு சவாலையே நானும், மனுஷ நாணயக்காரவும் ஏற்றிருந்தோம். மக்களை பாதுகாத்துவிட்டோம், ஆக எமக்கு எது நடந்தாலும் பரவாயில்லை, எமது புதிய பயணம் வெற்றிகரமாக தொடரும்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நேற்று தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கூட்டாக ஊடக சந்திப்பை நடத்தி இருந்தனர். இதன்போது ஹரின் பெர்ணான்டோ கூறியவை வருமாறு,

“ ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாகவே நான் நாடாளுமன்ற உறுப்பினரானேன். அதனால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது, அதற்காக சஜித் பிரேமதாசவுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். நாடு தொடர்பில் சிந்தித்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினேன். எத்தனை நாட்கள் பயணிக்க முடியும் என்ற உறுதிப்பாடு இருக்கவில்லை, எனினும், நானும், மனுச நாணயக்காரவும் ஈராண்டுகள் அமைச்சு பதவிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளோம்.

எனக்கு வழங்கப்பட்ட அமைச்சு பதவியை வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளேன். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, உறுமய காணி உரித்து பத்திரம் வழங்கப்பட்டுள்ளது, எனவே, கவலையுடன் அல்ல, மகிழ்ச்சியுடன்தான் அமைச்சு பதவியில் இருந்து விடைபெறுகின்றேன்.

நானும், மனுச நாணயக்காரவும் அமைச்சு பதவிகளை கோரவில்லை, மாறாக சஜித்தை பொறுப்பேற்குமாறே கூறினோம், ஆனால் அவர் பொறுப்பேற்கவில்லை, அதனால்தான் கட்சியிலிருந்து நாம் வெளியேறினோம். சஜித் பிரேமதாசவுடன் எனக்கு தனிப்பட்ட பிரச்சினை கிடையாது, அவர் ஜனாதிபதியானால்கூட பரவாயில்லை, அவர் சவாலை பொறுப்பேற்காமை தொடர்பிலேயே எனக்கு பிரச்சினை உள்ளது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles