ஹொரண வைத்தியசாலையின் 5 மற்றும் 9 ஆம் சிகிச்சை அறைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. குறித்த வைத்தியசாலையில் பணியாற்றிய இரு தாதியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியதையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாதியர்கள் இருவரும் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு தாதியரில் ஒருவரின் கணவர் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் சேவையாற்றும் நபர் எனவும் அவருக்கு, அவரது குடும்பத்தை சேர்ந்த மற்றுமொரு நபருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என ஹொரணை மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.