திருகோணமலை, சீனக்குடா விமான பயிற்சி தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் விபத்துள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று முற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு விமானப்படையினரே உயிரிழந்துள்ளனர்.
விமானப்படையினரும், பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
