திருகோணமலையில் விமான விபத்து – இருவர் உயிரிழப்பு

திருகோணமலை, சீனக்குடா விமான பயிற்சி தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் விபத்துள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று முற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு விமானப்படையினரே உயிரிழந்துள்ளனர்.

விமானப்படையினரும், பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Latest Articles