‘துமிந்த வெளியே’ – ஹிருணிக்காவின் பாதுகாப்பை பலப்படுத்துங்கள்!

ஹிருணிக்கா பிரேமசந்திர மற்றும் அவரின் தயாருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

” துமிந்த சில்வா ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் வெளியில் வந்துள்ளார். இது தொடர்பில் எனக்கு பிரச்சினை கிடையாது. ஆனால் நீதியை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. நீதி உரிய வகையில் செயற்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது.

ஹிருணிக்காவின் உயிர் பாதுகாப்புக்கான பொறுப்பை ஜனாதிபதி ஏற்க வேண்டும். அவருக்கு தேவையான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கவேண்டும். தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும்.” – என்றும் பொன்சேகா வலியுறுத்தினார்.

 

Related Articles

Latest Articles