பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவிநீக்கம் செய்வதற்குரிய பிரேரணை முன்வைக்கப்படும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா கூறியவை வருமாறு,
” தேசபந்து தென்னகோன் 20 நாள்கள் தலைமறைவாகி இருந்தார். அவர் இந்நாட்டில் சட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளார். அவரை பதவி நீக்குவதற்குரிய சாதாரண காரணிகள் உள்ளன. எனவே, பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டால் அதற்கு நாம் முழுமையான ஆதரவு வழங்கப்படும்.
எமது நாட்டுக்கு தகுதியான நிரந்த பொலிஸ்மா அதிபரொருவர் அவசியம். தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு நாமே அரசமைப்பு பேரவையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். எனவே, அவரை சட்டப்பூர்வமாக பதவி நீக்குவதற்கு நாம் தயார். அதற்குரிய பிரேரணையை விரைவில் முன்வைக்குமாறு அரசிடம் கோருகின்றோம்.” – என்றார்.
