தேசிய அமைப்பாளர் பதவியை தயாசிறிக்கு வழங்க தயார்: சாமர எம்.பி.

மக்கள் மத்தியில் எனக்கு செல்வாக்கு இருந்தாலும் ஜனாதிபதி பதவிக்கு வரவேண்டும் என்ற கனவு ஒருபோதும் கிடையாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாவிட்டால்கூட குறைந்தபட்சம் 25 எம்.பிக்களாவது கட்சி சார்பில் தெரிவாக வேண்டும்.

மக்கள் என்னுடன் செல்பி எடுக்கின்றனர். என்னை அதிகம் வரவேற்கின்றனர். அதனால் ஜனாதிபதி பதவி என்ற கனவு எனக்கு ஏற்படவில்லை.

ஏனெனில் அரசியலில் நான் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். எனக்கு பதவி முக்கியம் அல்ல. தயாசிறி ஜயசேகர நாளை கட்சிக்கு வந்தால்கூட எனது பதவியை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.

கட்சியால் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சரிவர நிறைவேற்றுவேன். வெட்டு குத்துகள் இருப்பின் முன்னோக்கி செல்ல முடியாது. எனவே, கட்சியை கட்டியெழுப்ப அனைவரும் பாடுபட வேண்டும்.” என்றார்.

Related Articles

Latest Articles