பாடசாலைகளுக்கிடையிலான 24 ஆவது தேசிய ஜுடோ சாம்பியன்ஷிப் – 2023 போட்டியில் புசல்லாவை, சரஸ்வதி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவியான பிரதீப் விஷாலினி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
தரம் 9 இல் கல்வி பயிலும் குறித்த மாணவி 70 KG இற்கு குறைவான ஜுடோ போட்டி பிரிவிலேயே மூன்றாம் இடத்தைப்பிடித்து, பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியானது கற்றல், கற்பித்தலைப்போன்று விளையாட்டு உள்ளிட்ட, தமிழ்தின போட்டி போன்ற இனைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கிவருகின்றது.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஜுடோ போட்டியென்பது அரிதாகவே காணப்படும் நிலையில், குறைந்தளவான விளையாட்டுத்துறை வளத்தை வைத்துக்கொண்டு, இப்படியான திறமைகளை வெளிப்படுத்துவதற்கு மாணவர்களுக்கு உற்சாகமளிக்கும், பயிற்சியளிக்கும் சரஸ்வதி மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளை பாராட்டியே ஆக வேண்டும்.
ஜுடோ விளையாட்டு போட்டியில் அடுத்த கட்டம் நோக்கி செல்வதற்கு இந்த மாணவிக்கு ஜுடோவுக்கான சீருடை உள்ளிட்ட உதவிகள் தேவைப்படுகின்றன. அவற்றை வழங்குவதற்கு எவராவது முன்வந்தால் அது பயனுள்ளதாக இருக்கும்.
தொடர்புகளுக்கு – 081-2058888
( சரஸ்வதி மத்திய கல்லூரி அதிபர் திரு. G.லோகேஸ்வரன்)










