ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லமாட்டார் என தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கூட்டமொன்று இன்று சிறிகொத்தவில் நடைபெற்றது. இதன்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார் என தெரியவருகின்றது.
பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு தேசியப்பட்டியல் ஊடாகவே ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.