” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தேர்தலை கண்டு அஞ்சவில்லை. தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போட நாம் துணைநிற்கவில்லை. தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசுக்கும் இல்லை. ஆனால் தேர்தலை எதிர்கொள்வதற்கு அஞ்சம், எதிரணிகளே இதுவிடயத்தில் வதந்திகளை பரப்பிவருகின்றன.” – எனவும் மொட்டு கட்சி செயலாளர் சுட்டிக்காட்டினார்.










