தேர்தல் பரப்புரையை ஜனவரி முதல் ஆரம்பிக்கிறது மொட்டு கட்சி

தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்து ஜனவரி முதல் கிராமிய மட்டத்திலான ‘தேர்தல் பிரச்சார’ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம் டிசம்பர் 15 ஆம் திகதி கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சியின் முக்கிய சில பதவிகளில் மாற்றங்கள் வரவுள்ளன. புதிய நியமனங்களும் இடம்பெறவுள்ளன .

2024 வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடர் டிசம்பரில் முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றம் ஜனவரிவரை ஒத்திவைக்கப்பட்டு, ஒருமாத கால விடுமுறை வழங்கப்படும்.

அந்த காலப்பகுதியிலேயே வழமையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களில் ஈடுபடுவார்கள். எனவேதான் ஜனவரி முதல் முழு வீச்சுடன் பிரசாரத்தில் இறங்குவதற்கு மொட்டு கட்சி முடிவெடுத்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் அடுத்தவருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles