டன்சினன் பகுதியில் (மகாத்மா காந்தி புரம்) கட்டப்பட்ட 148 வீடுகளில் பல வீடுகள் தற்போது சேதமடைந்துவருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் தற்போது பெய்துவரும் அடைமழையால் வீட்டின் முன் பகுதியும் , பிற்பகுதியிலும் உள்ள மண்மேடுகள் இடிந்து விழுவதாலும், மண் திட்டுக்கள் கீழ் இறங்குவதாலும் வீடுகளும் தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும், ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் சம்பவமிடத்துக்கு சென்று பார்வையிட்ட டன்சினன் வட்டார கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் ரஜினிகாந்த், இவ்விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனுக்கும் கொண்டு சென்றுள்ளதாகவும் அதேசமயத்தில் தோட்ட நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நிருபர் – நீலமேகம் பிரசாந்த்
