தொடர்கிறது விமலின் சத்தியாகிரகப் போராட்டம்!

கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்சால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 2ஆவது நாளாக தொடர்கின்றது.

கல்வி அமைச்சுக்கு முன்பாகவே நேற்று போராட்டம் ஆரம்பமானது. தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராடப்போவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles