தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் குழுக் கூட்டம், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது மன்றத்தினூடாக மேற்கொள்ளபட்ட கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகர்த்த மன்றத்தின் பணிப்பாளர் கனேஷ் ஈஸ்வரன், பிரதமரின் இனைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், அமைச்சின் அதிகாரிகள், மன்றத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Latest Articles