” சம்பள நிர்ணயசபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தீபாவளி பரிசு கிடைக்கவில்லை.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
எனினும், நாம் பொறுமை காக்கின்றோம். ஜனாதிபதி தான் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவார் என நம்புகின்றோம். தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.