” வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும்பட்சத்தில் அதனை தோற்கடிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.
பிரேரணையை தோற்கடிப்பதற்கு தேவையான பலம் அரசாங்கம் வசம் உள்ளது எனவும், ஆளுந்தரப்புக்குள் ஏற்பட்டிருந்த சிறு பிரச்சினைகூட இதன்மூலம் தீரும் எனவும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.
வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










