2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக்கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
14 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் உரை இடம்பெறும். மறுநாள் முதல் பட்ஜட்மீதான விவாதம் ஆரம்பமாகும்.










