நாட்டில் பஞ்சம் ஏற்படுமா? விவசாயத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

” நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்தார்.

” நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமென இரசாயன உர நிறுவனங்களின் பிரதிநிதிகளே அறிவிப்புகளை விடுத்துவருகின்றனர். 25 மாவட்டங்களில் உள்ள விவசாய அதிகாரிகளுடன் நான் பேச்சு நடத்தினேன். உற்பத்தி நடவடிக்கை தொடர்பில் மீளாய்வும் செய்தேன்.

உற்பத்தியில் ஓரளவு வீழ்ச்சி ஏற்படும் என்றபோதிலும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது. உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.”- என்றும் அமைச்சர் மஹிந்தானந்த குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles