நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 995 பேர் மீண்டுள்ளனர். ஆயிரத்து 132 பேர் பலியாகியுள்ளனர்.










