நாட்டில் மேலும் 420 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணிமூலம் 352 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 68 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது.
2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 30 ஆயிரத்து 257 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.










