நானுஓயா, ரதெல்ல குறுக்கு வீதி சந்தியில் வேனும், லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில் வேனில் பயணித்த மூவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று(07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நானுஓயா நகரில் இருந்து ரதல்ல குறுக்கு வழியில் பயணித்த லொறியும், நானுஓயாவில் இருந்து மாணவர்களை அழைத்து வந்து வேனும் ரதல்ல குறுக்கு வீதி சந்தியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறி சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரின் கவனக் குறைவால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
வீ. தீபன்ராஜ்










