நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு – வலுசக்தி அமைச்சர்

நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேவையான அளவு டீசல் மற்றும் பெற்ரோல் நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவத்துள்ளார்.

அதற்கமைய, 5,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 3,500 மெட்ரிக்  தொன் பெற்ரோல் என்பன விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles