நாளை முதல் சமையல் எரிவாயு விலைகளில் மாற்றம்

நாளை (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 9ஆம் திகதி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 246 ரூபாவால் குறைக்கப்பட்டது.

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலன் 4,664 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

Related Articles

Latest Articles