நீர்கொழும்பு ‘Amber Skye’ உடன் இலங்கையின் முதலாவது மெய்நிகர் சொத்து வெளியீட்டை அறிமுகம் செய்யும் பிரைம் குழுமம்

இலங்கையின் முன்னணி காணி கட்டட நிறுவனமான பிரைம் குழுமம் அண்மையில் தனது கடலுக்கு எதிரே சொகுசு வீட்டுத்திட்டத்தின் கட்டுமானத்தை ஆரம்பித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான, நீர்கொழும்பு ஹோட்டல் வீதியிலுள்ள இந்த அழகான சொகுசு மாடிக் கட்டட திட்டத்திற்கு Amber Skye Residencies பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், இரண்டு சொகுசு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்படும், அவற்றில் ஒன்று 19 மாடிகளும் மற்றொன்று 7 மாடிகளும் கொண்டு அமையும்.

Amber Skye Residencies வீட்டு தொகுதியின் கீழ் கட்டப்படவுள்ள மொத்த சொகுசு வீடுகளின் எண்ணிக்கை 145 ஆகும். 1 முதல் 3 படுக்கையறைகளைக் கொண்ட பல்வேறு வகையான வசதிகளுடன் கூடிய வீடுகளையும் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்ய வாய்ப்பு கிட்டியுள்ளது.

19.5 மில்லியன் ரூபாவில் இருந்து ஜூலை 17 முதல் Amber Skye Residencies சொகுசு கட்டடத் தொகுதியில் வாடிக்கையாளர்கள் விலை கொடுத்து வாங்குவதற்காக திறந்திருக்கும். பிரைம் குழுமம் 2024க்குள் வீட்டுக் கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளது.

கடலுக்கு எதிரே நிர்மாணிக்கப்படவுள்ள Amber Skye Residencies சொகுசு வீட்டுத் தொகுதி குறித்து பிரைம் குழுமத் தலைவர் பிரேமலால் பிராக்மனகே கூறுகையில், ‘எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குக்கான எதிர்கால புகலிடமான நீர்கொழும்பில் மிகவும் மதிப்புமிக்க இடத்தில் ஒரு சொகுசு வீட்டை சொந்தமாக்க வாய்ப்பு உள்ளது.

பிரைம் குழுமத்தில் இணையற்ற மற்றொரு கட்டுமான அனுபவத்தை அனுபவிக்க எங்கள் வாடிக்கையாளர்களுக்கு Amber Skye Residencies வீட்டு திட்டம் உண்மையிலேயே ஒரு அற்புதமான வாய்ப்பாகும்.

ஒருபுறம் நீர்கொழும்பின் வண்ணமயமான கடற்கரை மற்றும் இந்து சமுத்திரத்தை பார்க்கக் கூடிய விதத்தில் மறுபுறம் நீர்கொழும்பு கிரீன் பீச்சிற்கு இடையில் அமைந்திருக்கும் இந்த சொகுசு வீட்டுத் தொகுதித் திட்டம், சந்தேகத்திற்கு இடமின்றி உலகில் சிறந்ததை வழங்க முயற்சிப்பதாக எங்கள் பிராண்டின் வாக்குறுதியாகும்.

எங்கள் எல்லா ஆடம்பர வீட்டுத்த் தொகுதி திட்டங்களையும் போலவே, Amber Skye Residencies சொகுசு வீட்டுத் தொகுதித் திட்டமும் உலகின் சமீபத்திய கட்டடக்கலை நிபுணர்கள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி மிக உயர்ந்த கட்டுமானத் தரங்களை பராமரிக்கவும், வாழ்வின் இணையற்ற விடயங்களை அனுபவிக்கவும் கட்டமைக்கப்படவுள்ளது.’ என தெரிவித்தார்.

இங்கு நிர்மாணிக்கப்பட்டு வரும் சொகுசு Penthouses வீடுகள் மற்றும் சொகுசு வீடுகளுக்கு இயற்கையான வெளிச்சம் வரக் கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன, புதிய கட்டடக்கலை நுட்பங்களைப் பயன்படுத்தி வீட்டிற்கு அதிக இடத்தை சேர்க்கவும் நவீன வீடுகளுக்கு தேவையான அம்சங்களை சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்து சமுத்திரத்தில் சூரியன் மறையும் போது தென்படும் ஊதா நிற வானம் கண்ணைக் கவரும் காட்சி சந்தேகத்திற்கு இடமின்றி வேறு எங்கும் ஒப்பிடமுடியாத ஒரு அனுபவத்தை மனதில் கொண்டு வரும்.

மேலும், நீர்கொழும்பு கோல்டன் பீச்சின் இருப்பிடமும், சில நிமிடங்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய வசதியும் இந்த சொகுசு அடுக்குமாடி வீட்டுத் தொகுதியின் மற்றொரு அதிநவீன சொகுசு வீட்டுத் திட்டமாக மாற்றும்.

இந்த சொகுசு மாடி வீடுகளின் உரிமையாளர்களுக்கு தினசரி 24 மணி நேர வரவேற்பு சேவைகள், விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடவசதி, திறந்த மாடி நீச்சல் குள வசதிகள், குழந்தைகளுக்கான நீச்சல் குள வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானம், யோகா பயிற்சி கூடம், தொலை தூரத்தை ரசிக்கக் கூடிய தொலைநோக்கி வசதி, உடற்பயிற்சி கூடம், BBQ Terrace, உடற்பயிற்சி உணவகம் மற்றும் சந்திப்பு மையம், அத்துடன் சாரதிகளுக்கான ஓய்வு பகுதி, ஆகியன Amber Skye Residencies வீட்டு மாடி கட்டடத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வளாகத்தில் பணியாளர்கள் குடியிருப்பு, சலவை வசதிகள், டிஜிட்டல் கண்காணிப்பு கேமரா அமைப்புடன் 24 மணி நேர பாதுகாப்பு, மின்சார கார் சார்ஜிங் நிலையங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி நிறுத்துவதற்கான வசதிகளும் உள்ளன.

சுவையான உணவை அனுபவிக்கக்கூடிய பல நட்சத்திர சுற்றுலா ஹோட்டல்களுக்கு அருகில் அமைந்துள்ளதுடன், வரலாற்று சிறப்பு மிக்க நீர்கொழும்பில் சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவர்ந்துள்ள முகத்துவார ஈரநிலங்கள், அத்துடன் நீர்கொழும்பு ஒல்லாந்தர்களின் கோட்டை, மாஓயா, ஒல்லாந்தர்களின் மணிக்கூட்டுக் கோபுரம், மொரவல கடற்கரை போன்ற இடங்களுக்கு மிக விரைவாக செல்லவும் முடியும்.

பிரைம் குழுமம்

இலங்கையின் காணி கட்டட விற்பனை துறையில் சர்வதேச கடன் தரமான ICRA [A-] நிதி நிலைத் தன்மையைப் பெற்ற ஒரேயொருரு குழுமமான பிரைம் குழுமம் காணி மற்றும் கட்டட மேம்பாட்டுத் துறையில் சுமார் 25 வருடகால அனுபவத்தைக் கொண்ட முழுமையான இலங்கை வர்த்தக குழுமமாகும். பிரைம் குழுமம் LMD சஞ்சிகையினால் 2019 ஆண்டில் நாட்டின் வர்த்தகங்கள் மத்தியில் கௌரவமான வர்த்தக நாமங்கள் அடங்கிய நிறுவனங்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது.

அத்துடன் பிரைம் குழுமத்தின் தலைவர் மற்றும் அதன் துணை தலைவி ஆகியோரை LMD சஞ்சிகையினால் 2019ஆம் ஆண்டில் நாட்டின் சிறந்த 100 வர்த்தகங்களைச் சேர்ந்த ‘Realty Visionary’ and ‘Power Woman’இனால் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், பிரபலமான PropertyGuru Asia Property Awards விருது வழங்கும் நிகழ்வில் ‘Best Developer’ மற்றும் ‘Best Luxury Condo Development’ என்ற விருதுகளையும் வெல்வதற்கு பிரைம் குழுமத்திற்கு முடிந்தது. Asia One சஞ்சிகையினால் கௌரவிக்கப்படும் ஆசியாவின் விசேட இலச்சினைகளுக்குள் இடம்பிடித்துள்ளதுடன் 2018ஆம் ஆண்டு இலங்கைகயில் சிறந்த தொழில்முனைவோர் என்ற அந்தஸ்தையும் பிரைம் குழுமம் பெற்றது.

அத்துடன் தனியார் நிறுவன குழுமமாக இருந்த பிரைம் குழுமத்தில் சேவை மற்றும் முதலீடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் Prime Lands Residencies பொதுப் பங்கு விநியோகம் (IPO) மேற்கொள்ளப்பட்டதுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முடிவடைந்த இந்த பங்கு விநியோகத்தின் மூலம் குழுமத்தின் பங்குரிமை தொடர்பில் முதலீட்டாளர்களில் பெரும்பாலானோருக்கு சந்தர்பம் வழங்கியதனால் சர்வதேச தரத்திற்கு கட்டட விற்பனை நிறுவனமாக உருவாகுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles