‘நீர்கொழும்பு கடலில் மூழ்கிய மூவரும் மலையக இளைஞர்கள்’

நீர்கொழும்பு, கொச்சிக்கடை கடலில் நேற்று குளிக்கச் சென்று காணாமல்போன இளைஞர்களில் இருவர் தலவாக்லை, ஸ்டேலின் தோட்டத்தைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

முத்துகுமார் சிந்துஜன் வயது (24) ,மனோகரன் சசிகுமார் வயது (22) ஆகிய இருவரும் மேற்படி தோட்டத்தை சேர்ந்தவர்களாவர்.

குறித்த இளைஞர்கள் கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று (03) மாலை குளிப்பதற்காக தனது ஏழு நண்பர்களுடன் நீர்கொழும்பு கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தீடீரென அலைக்கு சிக்குண்டு கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போய்யுள்ளனர்.

காணமல் போன இளைஞர்கள் மூவரில் மற்றுமொருவர் பதுளை நமுனுகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.காணாமல் போனவர்களை தேடும் பணிகளை நேற்று (03.10.2020) மாலை கடற்படையினரும் சுழியோடிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.இது குறித்து மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles