ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்காவில் நீலக்குறிஞ்சி பூக்கள் வசந்தத்தைக் காண வருபவர்கள், தேசிய பூங்காவின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று ஹோர்டன் சமவெளி தேசிய பூங்கா பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிசிர ரத்நாயக்க தெரிவித்தார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை நான்கு வகையான மலர்கள் ஒன்றாக மலர்ந்துள்ளதாகவும், வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அவற்றைப் பார்க்க தேசிய பூங்காவிற்குள் அதிகளவானோர் வருகின்றனர்.
இவ்வாறு வருபவர்களில் சில குழுவினர், தேசிய பூங்காவின் விதிமுறைகளை மீறும் வகையில் செயல்படுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
வ.கார்த்திக்










