கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 42 பேர் பலியாகியுள்ளனர். நேற்றைய தினம் 6 பேரும், மே 14 முதல் 28 ஆம் திகதிவரை 36 மரணங்களும் பதிவாகியுள்ளன. இதில் நுவரெலியா மாவட்டத்தில் 6 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 405 ஆக அதிகரித்துள்ளது.