நுவரெலியா மாவட்டத்துக்கு மேலும் ஒரு லட்சம் சினோ பாம் தடுப்பூசி

நுவரெலியா மாவட்டத்துக்கு மேலும் ஒரு லட்சம் சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன – என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

சீனாவிலிருந்து மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் இன்று காலை இலங்கை வந்தடைந்தன. அவை எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதன்படி கம்பஹா மாவட்டத்துக்கு 5 லட்சம் தடுப்பூசிகளும், களுத்துறை மாவட்டத்துக்கு 3 லட்சம் தடுப்பூசிகளும், நுவரெலியா, பதுளை, மாத்தளை, அநுராதப்புரம், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு இலட்சம் தடுப்பூசி வீதம் வழங்கப்படவுள்ளன எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அத்துடன், நாட்டிற்கு மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன எனவும், ஆகஸ்ட் மாதத்துக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதே திட்டமாக உள்ளது எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles