2024 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் , யானை சின்னத்தின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்குரிய பிரச்சார வியூகம் பற்றி ஆராய்வதற்குரிய விசேட கூட்டமொன்று கொட்டகலையில் நேற்று நடைபெற்றது.
கொட்டகலை சிஎல்எப் வளாக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், பிரதித் தலைவர் கணபதி கணகராஜ், தேசிய அமைப்பாளர் சக்திவேல், ராஜதுரை உட்பட காங்கிரஸ் முக்கியஸ்தர்களும், காரியாலய உத்தியோகஸ்தர்கள், தோட்டக்கமிட்டி தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், தலைவிமார்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு எவ்வாறு வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு, கருத்துகள் பெறப்பட்டு தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டுள்ளன.
2024 பாராளுன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜீவன் தொண்டமான், மருதப்பாண்டி ராமேஸ்வரன், தேசிய தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் ஆகியோர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.