நுவரெலியாவில் 3 ஆயிரம் பேருக்கு இன்று தடுப்பூசி ஏற்றல்

நுவரெலியா பிரதேசத்திலுள்ள 3 ஆயிரம் பேருக்கு இன்று (9) புதன்கிழமை முதற் கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

நுவரெலியா சுகாதார பணியகத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இந்த தடுப்பூசி வழங்கும் திட்டம் நடைபெற்றது.

இதன் போது நுவரெலியா பிரதேசத்தில் கடமையாற்றும் கிராமசேவகர்கள், கிராம அபிவிருத்தி அதிகாரிகள், பொலிஸ் இராணுவ அதிகாரிகள், இலங்கை மின்சாரசபை உத்தியோகத்தர்கள்,நுவரெலியா மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், நுவரெலியா பிரதேசபை உத்தியோகத்தர்கள் உட்பட பல அரச உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் ,

” நுவரெலியா மாவட்டத்திற் 50 ஆயிரம் தடுப்பூசி கிடைத்துள்ளது இன்று முதல் நுவரெலியா மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதனை தொடர்ந்து கொத்மலை, வலப்பனை, அங்குராங்கெத்த மற்றும் அம்பகமுவ பிரதேசங்களிலும் இந்த தடுப்பூசி வழங்கும் வேளைத்திட்டம் தொடர்ந்து நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்மான் கூறுகையில்,

பெருந்தோட்டப்பகுதியில் நாளை 11 ஆம் திகதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர் களுக்கும் கர்ப்பினி தாய்மார்களுக்கும்பெருந்தோட்டப்பகுதிலுள்ள முன்கள உத்தியோகத்தர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்ககப்படும்.

நுவரெலியா மாவட்டத்திற்கு தற்பொழுது 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளது. மேலும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் ஜனாதிபதியுடனும் சுகாதார
அமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடாத்தி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.” – என்றார்.

நுவரெலியா  நிருபர் எஸ்.தியாகு

Related Articles

Latest Articles