பசறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன், ஆட்சியாளர்களின் செயற்பாடுகளைக் கண்டித்து தொடர் அதி நூதனப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை வெளிக்கொணருமுகமாக பிச்சை எடுக்கும் போராட்டத்தை, கொழும்பில் ஆரம்பித்திருந்தார்.
அதையடுத்து ஆட்சியாளர்களை வீட்டுக்கனுப்பும் செயற்பாட்டினை முன்னிலைப்படுத்தி மொட்டையடிக்கும் போராட்டத்தை, பசறை பிரதேச சபைக்கு முன்னால் (நேற்று) 24-03-2022ல் மேற்கொண்டார். இன்று 25-03-2022 பசறை பிரதேச சபைக்கு முன்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலையுயர்வைக் கண்டித்து ‘புண்ணாக்கு’ சாப்பிடும் போராட்டத்தையும்,
எரிவாயு தட்டுப்பாட்டினால் சமைக்க முடியாமலிருப்பதை வெளிக்கொணருமுகமாக பச்சையாக இறால்களை சாப்பிடும் போராட்டத்தையும் மேற்கொண்டார்.
எஸ்.கே.ஜி படத்தில் தொற்று நோய்க்கு எதிராகக்கூட போராடி, அதன்மூலம் பிரச்சாரம் தேடி, பெரும் வரவேற்பை பாலாஜி பெற்றார்.