நோர்வூட் தமிழ் வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறு

2022 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஐந்து மாணவர்கள் மூன்று ஏ (3A) தர சித்திகளை பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அதனடிப்படையில் பொறியியல் தொழினுட்ப பிரிவு மாணவன் S.சினோஷன் மூன்று ஏ (3A) தர சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.

அத்துடன், D.பிரதீஸ் எனும் மாணவன் 2 A,B பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் நான்காமிடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும் கலைப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் J.கிருபாலினி, P லோசன்யா, T.தனுக்
ஷியா , S.சபிபிரகரிஸ்தா ஆகிய நான்கு மாணவிகளும் மூன்று ஏ (3A) தர சித்திகளைப் பெற்று கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கல்லூரியின் மொத்த பெறுபேறுகளின் அடிப்படையில் 40 இற்கு மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

சிறந்த பெறுபேறுகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பாடசாலை நலன் விரும்பிகள் மற்றும் வலயக்கல்விக் காரியாலய பணிப்பாளர் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

Related Articles

Latest Articles