நோர்வூட் பகுதியில் 50 வயதுடைய பெண்ணொருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.
வாள்வெட்டை மேற்கொண்ட நபர் தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் நோர்வூட் பொலிஸார் இறங்கியுள்ளனர். நேற்றிரவே இக்கொடூரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எதற்காக குறித்த பெண் இலக்குவைக்கப்பட்டார் என்பது இன்னும் கண்டறியப்படாத நிலையில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்