பசறை பகுதியில் டெமேரியாவில் 42 வயதுடைய நபர் ஒருவருக்கும், இங்குருகடுவ வீதி பொல்காலந்த எனும் இடத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று (28) உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெமேரியா தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் காணப்பட்ட பெண்ணின் கணவருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொல்காலந்த இங்குருகடுவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்குமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் கொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப் படுத்தப்பட்டு PCR பரிசோதனை மேற்கொண்ட பின்னரே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு இன்றைய தினம் அழைத்து செல்லப்பட உள்ளதாக சுகாதார பரிசோதகர் V. ராஜதுரை தெரிவித்தார்.
