பசறை 13ஆம் மையில் கல்லருகே, கடந்த 20ஆம் திகதி இடம் பெற்ற தனியார் பஸ் விபத்தில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடுகளை வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் உயிரிழந்த 14 பேருக்கு தலா 95 ஆயிரம் ரூபா வீதமும், காயமடைந்த 32 பேருக்கு தலா 15 ஆயிரம் ரூபா வீதமும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ஊவா மாகாண ஆளுனர் அலுவலகத்தினால் 30 ஆயிரம் ரூபாவும், போக்குவரத்து ஆணைக்குழுவினால் 25 ஆயிரம் ரூபாவும், காப்புறுதி நிறுவனத்தினால் 25 ஆயிரம் ரூபாவும், ஊவா மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் 15 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட உள்ளன.
அதே போன்று விபத்தில் காயமடைந்த 32 பேருக்கும் தலா 15 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் வழங்க போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்ககை எடுத்துள்ளது.
ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முசாமில் தலைமையில் ஆளுனர் பணியகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் போதே, மேற்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
எம். செல்வராஜா. பதுளை நிருபர்










