சட்ட விரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை பசறைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
அத்துடன் இவ் அகழ்விற்கு பயன்படுத்திய பெருமளவிலான உபகரணத் தொகுதிகளையும், பொலிசார் மீட்டுள்ளனர்.
பசறைப் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட 19வது மைல் பகுதியிலேயே, மேற்படி இரத்தினக்கல் அகழ்வு இடம்பெற்றது.
பசறைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலொன்றினையடுத்து, விரைந்த பொலிசார், 19வது மைல் பகுதியில் இரத்தினக்கல் அகழ்ந்துகொண்டிருந்த மூவரை கைது செய்து, அகழ்விற்கு பயன்படுத்திக் கொண்டிருந்த பெருமளவிலான உபகரணங்களையும் மீட்டனர்.
பசறை – மீதும்பிட்டியவில் இருவரும், ஹொப்டன் என்ற இடத்தில் ஒருவருமாக மூவரே, கைது செய்யப்பட்டிருப்பவர்களாவர். இவர்களை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய, பசறைப் பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
