2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டார்.
வரவு – செலவுத் திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாளை முற்பகல் 10.30 மணிக்கு முன்வைக்கப்பட்டு, பாதீடு உரை இடம்பெறவுள்ளது.
