பண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் 1990 முதல் 98வரையிலான காலப்பகுதிக்குள்ளேயே இடம்பெற்றுள்ளதால் அந்த காலப்பகுதியில் பதவியிலிருந்தவர்கள் இது குறித்து பதிலளிக்கவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

” பண்டோரா ஆவணம் தொடர்பில் இரு விதமான கருத்துக்கள் காணப்படுகின்றன. சிலர் அது ஆதாரமற்றது என தெரிவிக்கின்றனர். சிலர் அது நம்பகதன்மை மிக்கது என குறிப்பிடுகின்றனர்.

நான் அந்த இணையத்தளத்திற்கு சென்றவேளை குறிப்பிட்ட பணப்பரிமாற்றங்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரேமதாச ஆகியோரின் காலப்பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பலரும் 2005 இல் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தையே குற்றம்சாட்டுகின்றனர்.
நிருபமா ராஜபக்ச எனது உறவினர்தான். ஆனால் அரசியல் என்பது வேறு.” – என்றார் நாமல்.










