குளவிக் கொட்டுக்கு இலக்காகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபரொருவரின் மூக்கின் ஊடாக பதினொரு குளவிகளை, வைத்தியர்கள் வெளியில் எடுத்தசம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
கலவுட பிரதேசவைத்தியசாலையிலிருந்து மேலதிகசி கிச்சைகளுக்காக குளவிக் கொற்றலுக்கிலக்கான 70 வயதுநிரம்பிய வயோதிபர்,பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
அந் நிலையில் அவ் வயோதிபர் தீவிரசிகிச்சைப் பிரிவிற்குற்படுத்தி,சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவ்வேளையில், அந் நபரின் மூக்கின் ஊடாகபதினொருகுளவிகள் வெளியில் எடுக்கப்பட்டன. அத்துடன் நூற்றுக் கணக்கானகுளவிகள் கொற்றியதினால் குளவி ஆணிகள் அந் நபரின் உடம்பெங்கும் இருந்ததை,டாக்டர்கள் அகற்றினர்.
(குளவிகள் கொற்றியதும் அதற்கு அறிகுறிகளாக வெள்ளை நிறத்தில் ஆணிகள் உடம்பெங்கும் பதியப்படும். அவ் ஆணிகளேஅகற்றப்பட்டனவாகும்)
மூன்று விசேட வைத்திய நிபுணர்கள், ஆறு தாதிகள் இணைந்துகுளவிக் கொற்றலுக்கு இழக்கானநபரை மூன்று மணித்தியாலங்களாக தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகபதுளைஅரசினர் மருத்துவமனை விசேட வைத்தியநிபுணர் பாலித்த ராஜபக்ச தெரிவித்தார்.
கலவுடையைச் சேர்ந்த சியதோரிஸ் என்ற 70 வயதுநிரம்பியநபர், மூலிகை மருந்தொன்றை எடுக்கவனப் பகுதிக்கு சென்றுள்ளார். அவ்வேளையில் மூலிகை மருந்தை எடுத்தபோதே, குளவிக்கூடொன்று கலைந்து,குளவிகள் அந் நபரைக் கொற்றின.