பதுளையில் பாடசாலைக்குள் 10 அடி நீளமான மலைப்பாம்பு!

பதுளை, லுனுகலை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனதாபுர மகா வித்தியாலயத்திற்குள் நுழைந்த மிகப்பெரிய மலைப்பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாம்பினை வனவிலங்கு திணைக்களத்திடம் ஒப்படைக்க லுனுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பாம்பு 10 அடி நீளமும் 25 கிலோ கிராம் நிறையும் கொண்டிருக்கிறது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதேசத்திலுள்ள நாய்கள், பூனைகள், கோழிகள் உட்பட விலங்குகளை உணவிற்கு எடுத்துவந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles