தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய பலர் இன்றைய தினம் (26/08) பதுளை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
பதுளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி , காரணமின்றி பயணம் செய்த வாகன சாரதிகளை கைது செய்துள்ளதுடனர். வாகனங்களையும் கைப்பற்றினர்.
அத்தியாவசிய சேவைகளுக்காக பயணம் செய்த வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்திய பின்னர் அனுப்பி வைக்கப்பட்டன.
ராமு தனராஜா










